Skip to main content

ம.பி. பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டு கொலை! 

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Six passes away in madhya pradesh

 

மத்தியப்பிரதேசம் மாநிலம், மொரேனா மாவட்டம், லேபா எனும் கிராமத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சுட்டுக்கொலை. 

 

லேபா கிராமத்தில் அருகருகே வசித்துவந்த இரு குடும்பத்தினரிடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு குடும்பத்தினரிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாய் தகராறு ஏற்பட, முதலில் பிரச்சனையை ஆரம்பித்து குடும்பத்தினர் மற்றொரு குடும்பத்தினர் மீது தடி உள்ளிட்ட பொருட்களால் தாக்கியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து எதிர் தரப்பினர் வீட்டில் இருந்த இளைஞர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால், தடியால் தாக்கிய குடும்பத்தை நோக்கி பல முறை சுட்டுள்ளார். இதில், தடியால் தாக்கிய குடும்பத்தில் இருந்த மூன்று பெண்கள், உட்பட ஆறு கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

 

இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்துவந்து மொத்த கிராமத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். குடும்பத்தினர் பெயரோ மற்ற விவரங்களோ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்