Skip to main content

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

தென்கிழக்கு டெல்லி அம்பேத்கர் நகரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 67 வயது முதியவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தென்கிழக்கு டெல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்த 67 வயது முதியவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 11 வயது சிறுமி மளிகை பொருட்கள் வாங்க வந்திருந்தாள். அவளிடம் ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து கொடுப்பது போல, கடைக்காரர், சிறுமியின் உடலை ஆங்காங்கே தொட்டுள்ளார். இது பற்றிய வீடியோ ஒன்று வைரலாக இணையதளத்தில் பரவியது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும், இதனை வீடியோ பதிவு செய்தவர் தன்னுடன் நிலத்தகராறில் ஈடுபட்டுள்ள பக்கத்து வீட்டினராக தான் இருக்கும். 

எனது பெயர் புகழை கெடுக்க அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். அவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் கூறினார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, முதியவரை கைது செய்தனர். வீடியோ காட்சியை இணையத்தில் வெளியிட்ட நபரையும் கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்