முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்

இதுதொடர்பாக, மண்டல அதிகாரி அசோக் குமார் சிங் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் பாபு பனாரசி தாஸ் வார்டில் இடம் பெற்றிருந்தது. கடந்த 2000-ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாஜ்பாய் வாக்களித்தார். அதை தொடர்ந்து, 2004-ல் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தலிலும் இங்கு வாக்களித்தார். அதன்பின்னர், உடல்நிலை சரியில்லாததால் வாஜ்பாய் நீண்ட காலமாக இந்த வார்டில் வசிக்கவில்லை. எனவே அவரது பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.