Skip to main content

டெல்லியில் தமிழக விவசாயிகள் 75-வது நாளாக போராட்டம்

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
டெல்லியில் தமிழக விவசாயிகள் 75-வது நாளாக போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 75-வது நாளாக போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடி வீட்டின் முன்பு மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து இரவில் விடுதலை செய்தனர். போலீஸ் காவலில் இருந்தபோது அவர்களிடம் இருந்த செல்போன்களை போலீசார் வாங்கிக்கொண்டு இரவில் ஒப்படைத்தனர்.

இதனை கண்டித்தும், உடல் நலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு வருவதாக கேள்விப்பட்டு விவசாயிகள் தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றனர். ஆனால் முதல்வர் வராததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

சார்ந்த செய்திகள்