ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திக்கிறார்கள்
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஜெ.நினைவிடத்திற்கு செல்லவிருக்கிறார். இருவரும் ஜெ. நினைவிடத்தில் சந்தித்து இணைகிறார்கள். பின்னர் இருவரும் அதிமுக தலைமையகம் செல்கின்றனர்.
இதையடுத்து ஜெ.நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.