Skip to main content

கணவனுக்காகச் சாராயம் காய்ச்சிய மனைவி... எச்சரித்து அனுப்பிய போலீஸ் உயர் அதிகாரி!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

 

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் சிலர் டாஸ்டாக் கடைகள் மூடப்படுவதற்கு முன்பே பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கிப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர்.அதுவும் தீர்த்து போனதால் தற்போது மது பிரியர்கள் தங்களுக்கு மது கிடைக்காதா எனச் சுற்றித் திரிந்து வருகின்றனர். 

 

richy



இந்த நிலையில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகத் தகவல் கிடைத்தால் அதனை ஒருவர் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.ஊரங்டகு என்பதால் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தனது வாகனத்தில் வரும்போது, சாலையில் செல்பவர்களை எங்குச் செல்கிறீர்கள்.தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என அட்வைஸ் செய்து கொண்டிருந்தபோது,சந்தேகப்படும்படி ஒரு நபர் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை விசாரித்துள்ளார். 
 

அப்போது அவரது கையில் சாராயப்பாட்டில் இருந்துள்ளது.இது எங்கு கிடைத்தது? எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள்? என்று விசாரிக்கும்போது,ராம்ஜி நகரில் ஒரு லிட்டர் பாட்டில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார். வாங்கிய இடத்தைக் காட்டு என அந்த நபரைப் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் போலீசார். 
 

http://onelink.to/nknapp


அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவரிடம் போலீசார் விசாரித்தபோது,தனது கணவர் குடிப்பழக்கம் உள்ளவர்.அவரால் குடிக்காமல் இருக்க முடியாது என்பதால் நானே காய்ச்ச ஆரம்பித்தேன் எனக் கூறியிருக்கிறார்.இதற்கான மூலப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என விசாரித்தபோது,காலையில் கடைகளுக்குச் சென்று வாங்கி வருவேன் எனவும்,அதிகமாகக் கணவர் குடிக்க ஆரம்பித்ததால் வீட்டில் உள்ள சாராயத்தை விற்றதாகத் தெரிவித்திருக்கிறார்.
 

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அந்தப் பெண்மணியை எச்சரித்துவிட்டு,அவர்களிடம் பாட்டில்களில் இருந்த சாராயத்தைக் கீழே ஊற்றிவிட்டுச் சென்றனர் போலீசார். 


-மகேஷ்
 

 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.