Skip to main content

நெல்லை அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு போடும் போது வெடி விபத்து: ஒருவர் பலி

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
நெல்லை அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு போடும் போது வெடி விபத்து: ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலூருட்டி பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை திருவிழாவில் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது வானில் சென்ற வெடிக்கும் பட்டாசு போடும் போது அதில் இருந்து வந்த தீப்பொறி அங்கு குவித்து வைக்கப்பட்ட பட்டாசுகள் மீது விழுந்துள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு நின்றிருந்தவர்கள் 7 மீது தீக்காயம் ஏற்பட்டு பலத்த தீக்காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணபதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-செய்தி : படம் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்