கஞ்சா விற்ற வாலிபர் கைது

இதில் இவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் இவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் உனசூர் தாலுகா பிரதமை ஹள்ளி கிராமத்தை சேர்ந்த சதாம் உசேன் (30) என்றும், மைசூருவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கிராம பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.