Skip to main content

''விஜய்யிடம் போராட்ட குணம் இல்லை; இப்போல்லாம் எப்படி பழிவாங்குவார்கள் என்றே தெரியாது''-கே.ராஜன் கருத்து

Published on 18/06/2023 | Edited on 19/06/2023

 

"Vijay has no fighting spirit; I don't know how they will take revenge now'' - K. Rajan's opinion

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். 

 

இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். பின்பு சாதித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். 

 

நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்த வருகின்றனர். சிலர் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்தில் செயல்பாட்டை தொடங்கியுள்ளார் எனவும் தெரிவித்து வந்தனர்.

 

nn

 

இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''நடிகர் விஜய் நேற்றைய தினம் மாணவர்களை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி இருக்கிறார். முதன்மையான மதிப்பெண் எடுத்த பெண்ணிற்கு வைர நெக்லஸ் வழங்கியிருக்கிறார். மிகச் சிறப்பான ஒரு விஷயம். இதில் ஒரு அரசியல் இருக்கிறதா இல்லையா என்றால் இருக்கிறது. ஏனென்றால் 235 தொகுதியில் இருந்து மூன்று மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்தால் இந்த மாணவர்களின் பெற்றோர்களின் பேச்சு அந்த தொகுதியில் பரவும். தொகுதி என்றாலே அரசியல் ஆகிவிடும். அவர் பேசுகின்ற பொழுது அம்பேத்கர், பெரியார், காமராஜரை நீங்கள் படியுங்கள் என்றார். மிகப்பெரிய தலைவர்கள் அவர்களை மட்டுமல்ல அண்ணாவைப் படிக்க வேண்டும்; கலைஞரை படிக்க வேண்டும்; எம்ஜிஆரை படிக்கணும்; ஜெயலலிதாவை கூட படிக்க வேண்டும். அதை அவாய்ட் பண்ணி இருக்கிறார். அவர்களிடம் உள்ள சிறப்புகளை எல்லாம் சொல்ல வேண்டும். ஓட்டு போட உங்க அப்பா அம்மா பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் எனக்கூறியுள்ளார். இது அரசியலா இல்லையா? நாளைக்கு நான் வந்தா என்கிட்ட ஓட்டு போட காசு வாங்க வேண்டாம் என்று சொல்லுங்க என்பதை மறைமுகமாக சொல்லும் மாதிரியும் அது இருந்தது.

 

இது எதிர்கால அரசியலுக்கான அடிதான். ஆனால் இன்னும் நிச்சயமாக விஜய் பக்குவப்படவில்லை. நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். அவர் மெர்சல் படத்தில் ஒரே ஒரு டயலாக் பேசினார். இந்திய நாடு ஜனநாயக நாடு பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ள நாடு. அதில் ஜிஎஸ்டி பற்றி சின்ன டயலாக் பேசி விட்டார். அதற்காக வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தனி காரில் கூட்டிக்கொண்டு வந்தார்கள். வழியில் என்ன நடந்தது என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அன்று இரவெல்லாம் அவரது வீட்டில் சோதனை நடந்தது. சோதனை நடக்கட்டும் நடப்பது தப்பில்லை. ஆனால் அந்த சித்திரவதைகள், தவறான அணுகுமுறைகள் மனிதனை துன்பப்படுத்துவது தான் தவறு. அதற்கு அப்புறம் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கும். ஒரு படத்திலும் அரசியல் டயலாக் கிடையாது. அன்னைக்கே அவர்  ரசிகர்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தி இருந்தால் அரசியலுக்கு தகுதி உண்டு. அவரிடம் போராட்ட குணம் இல்லை. அரசியலுக்கு வந்தால் அது இருக்க வேண்டும். இப்போ இருக்கும் ஆட்சிகள் எப்படி பழிவாங்குவார்கள், எப்படி உள்ளே போடுவார்கள் என்றே தெரியாது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.