Skip to main content

டிராவல்ஸ் ஏஜென்சிகளிடம் 60 லட்சம் மோசடி செய்தவர் கைது!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையை சேர்ந்த சாதிக் அலி(49) என்பவர் ஏர் டிராவல்ஸ் மற்றும் மணி டிரான்ஸ்பர் ஏஜென்சி நடத்தி வருகிறார்.


 

இவரிடம் கடந்த 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பேயம்பாளையத்தை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் பர்கத்அலி(27) என்பவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'தான் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிவதாகவும், ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ள தனது மகன் சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான டிக்கெட் வேண்டும்'  என்றும் கேட்டு, அவரது ஆதார் கார்டு நம்பரை சாதிக் அலியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

police


பின்னர் தனது நண்பரின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அவசரத் தேவையாக ரூபாய் 20 ஆயிரம் வேண்டுமென்று வாங்கியுள்ளார்.  மேலும் அந்த நண்பரின் மகன் இறந்துவிட்டதால் அடக்கம் செய்ய மேலும் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வேறு வேறு வங்கிக் கணக்குகளை அனுப்பி பணம் பெற்றுள்ளார். விமான டிக்கெட் புக் செய்யும் போது இந்த பணத்தை எல்லாம் தருவதாக கூறி உள்ளார். ஆனால் பர்கத் அலி சொன்னபடி பணம் தராததால் சந்தேகமடைந்த சாதிக் அலி மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.  police

 

இது குறித்து மங்கலம்பேட்டை போலீசில் அவர் புகார் செய்ததனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பர்கத் அலியின் புகைப்படத்தை கண்டுபிடித்து பில்லூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பேருந்தில் வந்த பர்கத்அலியை மடக்கி பிடித்தனர்.


 

பின்னர் விசாரணையில் 'ஜஸ்ட் டயல் அப்' பில் டிராவல்ஸ் ஏஜென்சிகளின் நம்பர்களை தெரிந்துகொண்டு தமிழகம் முழுவதும் ஏர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் 150-க்கும் மேற்பட்டவர்களிடம்  ரூபாய் 60 லட்சம் வரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.  மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் பர்கத்அலி மீது வழக்குப்பதிவு செய்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பாரதியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.



இந்த பர்கத்அலி வங்கிகளுக்கு வரும்  வாடிக்கையாளர்களிடம் தன்னை ஒரு ராணுவ வீரர் என  அறிமுகம் செய்து தனது ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டது என்று கூறி அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போட சொல்லுகிறேன் என வங்கி கணக்கு என்னை கேட்டு வாங்கி அந்த எண்ணை ஏர் டிராவல்ஸ் ஏஜென்சிகளிடம் கொடுத்து பணத்தை பெற்றுள்ளார்.

 

இவரிடம் பாதிக்கப்பட்டோர் கடந்த ஆண்டு 'டாக்டர் பர்கத்அலியால்  பாதிக்கப்பட்டோர் குழு' என்ற  வாட்ஸ் அப் குழு ஒன்று துவக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.