Skip to main content

கடந்த வாரம் குப்பைக்கு போன மலர்கள் இன்று ரூபாய் 200- க்கு விற்பனை. 

Published on 06/10/2019 | Edited on 06/10/2019

விவசாயிகளின் வியர்வையில் மனக்கும் மலர்கள், கடந்த வாரம் வரை விலையில்லாமல் விற்பனை செய்யப்படாமல் டன் கணக்கில் மலர்கள் குப்பைக்கு போனது. இதனால் உற்பத்தி செலவைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த நிலையில் தான் அயுத பூஜைக்காக இன்று ஒரு நாள் மலர்களின் விலை உயர்ந்துள்ளது. 
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், செரியலூர், மாங்காடு, வடகாடு, அணவயல், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு என்று சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவரங்குளம் அருகில் உள்ள செம்பட்டிவிடுதி, மழையூர் உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களில் மலர் சாகுபடி அதிகம். ஒவ்வொரு நாளும் கீரமங்கலம் மலர் சந்தைக்கு 15 டன் வரை மலர்கள் விற்பனைக்கு வருகிறது.

 Went into the trash last week in flower   Flowers are on sale today for Rs 200.


ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற மலர்களுடன் மாலைகள் கட்டப்பயன்படும் சென்டி, சம்பங்கி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, அரளி போன்ற மலர் உற்பத்தியும் அதிகம். இந்த நிலையில் தான் கீரமங்கலம் மலர் சந்தையில், கடந்த வாரத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக சம்பங்கி மலர்கள் கிலோ ரூபாய் 5 க்கு விற்பனை ஆனது. அதேபோல் சென்டிப் பூக்கள் கிலோ ரூ. 5 க்கும் விற்பனை ஆனது. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும், ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. அந்த பூக்களையும் விற்க முடியாமல், ஒரு நாளைக்கு 3 முதல் 5 டன் மலர்கள் வரை குப்பைக்கு போனது. இதனால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனா்.
 

 Went into the trash last week in flower   Flowers are on sale today for Rs 200.


நாளை ஆயுத பூஜை, விஜயதசமி என்று அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், மலா்களின் விலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கீரமங்கலம் மலர் சந்தையில் இன்று மல்லிகை, முல்லை, அரளி பூக்கள் கிலோ ரூ. 400- க்கும்,  கனகாம்பரம் ரூ. 300- க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் ரூ. 5- க்கு கூட வியாபாரிகளால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட சம்பங்கி மலர்கள் இன்று கிலோ ரூ. 200- க்கும், சென்டிப் பூக்கள் கிலோ ரூ. 50 முதல் 80 வரைக்கும் விற்பனை ஆனது. மலர்களின் விலை தொடர்ந்து விலையேற்றத்தில் இருந்தால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும்  நஷ்டம் ஏற்படாமல் இருக்கும் என்கிறார்கள் சந்தை வியாபாரிகள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.