இந்திய மாணவர்கள் சங்கத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் இசக்கி என்பவரை நேற்று இரவு எந்தவித காரணமும் சொல்லாமல் எம்.கே.,பி. காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட இசக்கி நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் எழுச்சி போராட்டம் நடந்த சமயத்தில் சென்னையில் மாணவர்களை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இந்நிலையில் அவரின் திடீர் கைது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்து வந்த நிலையில் இன்று இசக்கி ஜாமினில் வெளிவந்துள்ளார்.