Skip to main content

பாஜக பிரமுகரின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி; கைது செய்த காவல்துறை

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Public shocked by BJP leader's action; Arrested by the police

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக முன்னாள் நகரச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனத்தில் வரும் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தொடர்பான காட்சிகள் சிசிடிவிக்களில் பதிவானது. குற்றம் செய்தவரை கைது செய்யும் நோக்கில் திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

காவல்துறையின் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பாஜக முன்னாள் நகரச் செயலாளர் அறிவழகன் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் அறிவழகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் கொள்ளையடிப்பதில் கிடைக்கும் பணத்தை மதுவருந்த பயன்படுத்துவதும் தெரியவந்தது. அறிவழகன் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

மத்தியில் ஆளும் பாஜகவின் முன்னாள் நகரச் செயலாளராக இருந்த முன்னாள் நிர்வாகி ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்