Skip to main content

’ஊழல் நிறைந்த ஆட்சியாகவே தற்போதைய அரசை மக்கள் பார்க்கின்றனர்’- ஐ.பி.செந்தில்குமார் பேச்சு!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
ip

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார்.  

 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது.... தமிழகத்தில் பாஜக தலைமையிலான அதிமுக ஆட்சி நடக்கிறது.  எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தான் அதிகம் நடப்பதோடு ஊழல் நிறைந்த ஆட்சியாகவே தற்போதைய அரசை மக்கள் பார்க்கின்றனர்.  வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும்.  அதில் எந்த மாற்றமும் இல்லை . அதன் மூலம் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று கூறினார். 


 இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஒன்றிய செயலாளர்கள் மாயாண்டி, செல்வராஜ் பேரூர் கழக செயலாளர்கள் கருணாநிதி, செல்வராஜ் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்