Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்த தன்னார்வலர்கள்!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

கஜா புயலில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று அரசாங்கங்கள் சொன்னது. பல கிராமங்களில் அரசாங்க வீடுகளுக்காக காத்திருந்தனர் விவசாயிகள். உடைந்து வீடுகளுக்கு கூட முறையான நிவாரணம் கிடைக்கவில்லை என்று புலம்பினார்கள். முத்துப்பேட்டையில் ஒருவர் தனது வீட்டுக்கு நிவாரணம் கேட்டு கேட்டு அலைந்தார் கிடைக்கவில்லை அதனால் கஜா நினைவு இல்லம் என்று உடைந்த வீட்டை நினைவுச்சின்னமாக மாற்றிவிட்டார்.

 

 Volunteers who built houses for people affected by the Caja storm

 

இந்த நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு உக்கடை அம்பாள்புரம் கிராமத்தில் கஜா புயலால் ஏராளமான குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டது. இதையடு‌த்து நிவாரணப்பணிகளுக்காக வந்தவர்கள் வீடுகளின் அவலநிலையை பார்த்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாய் வாழ் நண்பர்கள் மற்றும் புதுக்கோட்டை விதைக்-கலாம் அறக்கட்டளை சார்பில் வீடு கட்டித்தர முடிவெடுத்தனர்.

அடுத்த சில மாதங்களில் பணிகளை தொடங்கினார்கள். பணிகள் முடிவடைந்த நிலையில் ரூ 25 லட்சம் மதிப்பிலான, 18 புதிய வீடுகளும், 8 புதுப்பிக்கப்பட்ட வீடுகள் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா வைத்து ஒப்படைத்தனர். 

 

 Volunteers who built houses for people affected by the Caja storm


இந்நிகழ்ச்சிக்கு துபாய் வாழ் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவகோட்டை ஏ.என்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி கோ.செல்வம், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் புதுக்கோட்டை சொக்கலிங்கம், டாக்டர் ராமசாமி, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் விதைக்-கலாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கட்டயங்காடு உக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், துபாய் வாழ் நண்பர்கள் மற்றும் புதுக்கோட்டை விதைக்-கலாம் அறக்கட்டளை சார்பில்,  ரூ 40 ஆயிரம் மதிப்பில் பள்ளியில் அமைக்கப்பட்ட தரைத்தளம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 

 Volunteers who built houses for people affected by the Caja storm

 

புயலில் ஒட்டுமொத்த கிராமங்களும் பாதிக்கப்பட்டு நடக்க கூட வழியில்லாமல் நின்ற போது தங்களுக்கான பாதைகளை தாங்களே உருவாக்கிக் கொண்ட இளைஞர்கள் மீட்புப் பணிக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கவில்லை. களமிறங்கினார்கள் சாலைகளை சீரமைத்து மின்கம்பங்களை நட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே கொடுக்க வேண்டிய உணவு, உடை போன்ற அரசு நிவாரணப் பொருட்களை ஒருமாதம் கடந்து பாதிப்பேருக்கு கொடுத்தனர். ஆனால்  இளைஞர்கள் களமிறங்கியதால் அரசாங்கத்தின் பணி 75 சதவீதம் முடிந்திருந்தது. இப்போது வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறார்கள். பாராட்டுவோம் இளைஞர்கைளை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.