Skip to main content

தினகரனுக்கு மாஸ்டரே செயல்தலைவர்தான்- ஜெயக்குமார்

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

 

சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,

 

தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பல முறை பேச்சுவார்தை நடத்தியாயிற்று தற்போது சட்டமன்றம் கூடும் நிலையில் அதுபற்றி கருத்து கூறமுடியாது. ஏற்கனவே அரசின் நிலையை அறியும்படி பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது எனவே அரசின் நிலைப்பாடு எல்லோருக்கும் எல்லாம் செய்யவேண்டும் என்பதுதான் ஆனால் சட்டியில் இருந்தால்தானே  அகப்பையில் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும் எனவே நிச்சயமாக அவர்களும் உணர்வார்கள்.

 

jayakumar

 

தண்ணீர் திறக்க முடியாது என்று சொன்ன ஒரே முதமைச்சர் எடப்பாடி என டிடிவி.தினகரன் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.  நேற்றுக்கூட அவர் பதினெட்டாம் படி என்றும் கூறியுள்ளார் அவர் என்ன சபரிமலை சாமியா ?, புலிப்பால் கொண்டுவருபவரா அவர் ?  வேறும் மனப்பால் குடிப்பவர் எனவே அதுவெல்லாம் எடுபடாது.

 

தினகரன் எம்.பி.யாக இருக்கும்பொழுது பாராளுமன்றத்தில்ஒரு தடவைகூட காவிரி பற்றி பேசவில்லை சட்டமன்றதில்  நாங்களெல்லாம்  அம்மா பற்றியும் எம்ஜிஆர் பேரையும் சொல்லிதான் பேச தொடங்குவோம் ஆனால் அவரோ பேசுவதே நான்கு வார்த்தைதான் அதிலும் அம்மா பற்றி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. திமுகவுடன் சேர்ந்து அவர்களுடைய குரலைத்தான் அவர் பிரதிபலித்து கொண்டிருக்கிறார் எனவே தினகரனுக்கு மாஸ்டரே செயல்தலைவர்தான்.

 

தமிழக அரசு வீணாக செலவளிக்கிறது என்ற அன்புமணி ராமதாஸின் குற்றசாட்டு ஏற்புடையதல்ல, இன்று தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், நெசவாளர், கைத்தறி தொழிலாளர், மீனவர், விவசாயிகள்  என எல்லாதரப்பு மக்களுக்கும் அரசு புதுபுது திட்டங்களை செய்து வருகிறது.  இன்று தமிகத்தில் என்ன வளர்ச்சி  இல்லை  ரோடு இருக்கிறது, கரண்ட் இருக்கிறது கனெக்டிவிட்டி இருக்கு இதையெல்லாம் அவர் நிறுத்த சொல்கிறாரா? சும்மா பொத்தம்பொதுவாக சொல்லக்கூடாது எனக்கூறினார். 

 

நடிகர் கருணாஸ் ஆட்சிமாற்றம் விரைவில் வரும் எனக்கூறியுள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு ''காலையில ஒரு வாய் நைட்டு ஒரு வாய்'' என பதிலளித்தார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது