50 லட்சம் கேட்டு மெட்ரோ ரயில்வே அதிகாரி மகன் கடத்தல்

இந்நிலையில், நேற்று முன்தினம் காணாமல் போன அஸ்வின்குமார் செல்போனில் இருந்து அவரது தந்தைக்கு போன் வந்தது. காணாமல் போன மகன்தான் பேசுகிறான் என்று அவர் பதற்றத்துடன் பேசியபோது, அதில் வேறு ஒருவர் பேசினார். போனில் பேசிய நபர், உங்களது மகன் அஸ்வின்குமார் எங்களிடம் தான் உள்ளான், 50 லட்சம் கொடுத்தால் அவனை விட்டு விடுகிறோம். இல்லையேல் கொலை செய்து விடுவோம். போலீசுக்கு சென்றால் உன் மகன் உயிரோடு இருக்க மாட்டான்’’ என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து போன் மூலம் கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியது குறித்து அஜய்குமார் சாத்தாங்காடு போலீசில் நேற்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து பேசிய செல்போன் டவர் சிக்னல் எங்கே இருந்து வந்துள்ளது என்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலமும் மகனை கண்டு பிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளனர்.