நடைபயிற்சியின் போது ராணுவ அதிகாரி மாரடைப்பால் மரணம்

அதன்படி விரைந்து வந்த போலீசார் மயங்கி விழுந்த நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஆய்வு செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பல்லவன் இல்லம் அருகே உள்ள தென் பிராந்திய ராணுவ மையத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் விஸ்வாஸ் குமார் என்று. இவர் ராணுவத்தில் கர்னல் பதவி வகித்து வந்தது தெரியவந்தது.