Skip to main content

உயிரே உன் விலை என்ன? அலட்சியத்தில் அதிகாரிகள்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

 

நெல்லை மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சியிலிருப்பவர் மைனாரிட்டி சமூகப்பிரிவைச் சேர்ந்த ஐயப்பன். மனைவி முத்து மாரியம்மாள். கிராமங்களில் மைக் செட் கூலியில் ஜீவனம் நடத்தி வரும் இவர்களுக்கு எம்.பி.ஏ. படிக்கும் மகன் பழனி நாராயணன் மற்றும் பி.காம் படிப்பிலிருக்கும் ரஞ்சிதா என்ற மகளும் உண்டு கஷ்டப்பட்ட நிலையிலும் இருவரின் படிப்பிற்கான செலவை செய்து வருபவர்.

கடந்த 02ம் தேதி அருகிலுள்ள கருத்தப்பிள்ளையூரில் மைக் செட் அமைத்துவிட்டு இரவில் தன் மொபட்டில் அந்த ஒதுக்குப் புற சாலையில் திரும்பி வந்திருக்கிறார். வழியில் வயல் வெளியையும், மேல் ஆம்பூர் குளத்தை இணைப்பதற்கான மதகு அமைப்பதற்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பெரிய சிமெண்ட் பைப் பொருத்தும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் பள்ளம் தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கைப் பலகையும் தடுப்புச் சுவரையும் காண்ட்ராக்டர் வைக்கவில்லை. பொறுப்பான பொதுப்பணித்துறையும் முக்கியமான இதைக் கவனிக்கவில்லை.

அந்த வழியில் வந்த ஐயப்பனின் மொபட் பக்கத்திலிருந்த மண் குவியலில் மோதி அப்படியே மொபட்டுடன் குழியில் விழ, பெரிய சிமெண்ட் பைப்பில் தலைமோதி நெருகலான பள்ளத்தில் விழுந்தவரின் உயிர் துடி துடித்துப் பறந்திருக்கிறது. அதிகாலையில் அந்தப் பக்கம் விவசாய வேலைக்குப் போனவர்கள் தகவல் தர, ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் கடையம் போலீசாரும், குடும்பத்தார்களும் வழக்கப்படி கடையம் போலீசிலும் வழக்குப் பதிவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை, ஸ்பாட்டில் எச்சரிக்கை அமைப்புகளில்லாததால் மரணம் சம்பவித்தது கண்டு காரணமான பொதுப்பணித்துறையினரை தொடர்பு கொண்டும் பலனில்லை.

பாதிக்கப்பட்ட ஐயப்பனின் மனைவி முத்து மாரியம்மாளிடம் தன்னால் முடிந்த நிவாரணத் தொகையைத் தனிப்பட்ட முறையில் கொடுத்து உதவிய எம்.எல்.ஏ. பூங்கோதை நடந்தவைகளை நிவாரணம் பொருட்டு அரசு வரை கொண்டு போயிருக்கிறார்.

சாலையைப் பிளந்து பெரிய பள்ளமைமத்து மதகு அமைக்கும் பொதுப்பணித்துறை மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட வேண்டிய குறைந்தபட்ச தடுப்ப சுவரும் அமைக்கவில்லை எச்சரிக்கை போர்டும் வைக்கவில்லை பறி போனது விலை மதிப்பில்லா ஒரு உயிர். அதற்கான உரிய நிவாரணம் கிடைக்காமல் விடமாட்டேன் என்கிறார் எம்.எல்.ஏ. பூங்கோதை.

பலியான ஐயப்பனின் சகோதரன் கணேசனோ. ஜெனரேட்டர் அமைத்து விட்டு பக்கத்து ஊர் செல்கிறேன் என்று மட்டும் இரவில் தகவல் சொன்னார். மறு நாள் காலை உடலை பார்த்தவர்கள் சொன்ன பிறகுதான் விஷயமே உரைத்தது என்றார் பதற்றத்துடன். பறி போனது கூலி வேலை பார்த்து பிழைப்பவரின் உயிர். உயிர்களில் சாதாரணமானவனின் உயிர் அசாதாரணமானவரின் உயிர் என்ற பேதம் கூடவே கூடாது. அது பேராபத்து. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.