Skip to main content

"இவை இரண்டையும் ஒரே தராசில் உள்ள இரு தட்டுகளாகவே பார்க்கிறோம்" - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

mk stalin

 

தமிழக முதல்வர் தலைமையில் மார்ச் 10 முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு சார்பில் கடந்த 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

 

மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட ஒழுங்கு, வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களுடன், வனத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தொழிற்வளர்ச்சியையும், சுற்றுச்சூழலையும் ஒரே தராசில் உள்ள இரு தட்டுகள் போலவே கருதுவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், தொழில், சுற்றுச்சூழல் இரண்டையும் சமுதாயத்தின் சமநண்பர்கள் என்ற அளவில் முன்னெடுத்துச் செல்ல தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிடும்படி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்தார்.   

 

 

சார்ந்த செய்திகள்