Skip to main content

நிர்வாண படம் - பெண் போலீஸ் அதிர்ச்சி

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
police


பெண் போலீஸ் புகைப்படத்தை நிர்வாணமாக வெளியிட்ட டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

கேரள மாநிலம் கொச்சி மெட்ரோ ரயில்வே காவல்நிலையத்தில் பணியாற்றி வருபவர் ரதி. ஏட்டாக பணியாற்றும் இவரது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரதிக்கு தெரியவர உடனே அவர் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

 

போலீசார் உடனடியாக விசாரணையில் ஈடுபட்டனர். நெடுமங்காட்டை சேர்ந்த 26 வயதான ஆட்டோ டிரைவர்  சித்திக் என்பவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 

சித்திக்கை விசாரித்த போலீசார் கூறும்போது, எப்போதும் பேஸ்புக்கை பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்துள்ளார் சித்திக். பெண்களை மோசமாக சித்தரிக்கும் பேஸ்புக் பக்கங்களையே பார்ப்பதும், அந்த பேஸ்புக் குரூப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

 

 

பேஸ்புக்கில் வரும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதில் தலையை மட்டும் மாற்றி ஆபாச படத்துடன் இணைத்து வெளியிட்டு, பின்னர் அவர்களிடம் அதனை காட்டி பணம் பறிப்பது இவர்களது வழக்கம் என தெரிய வந்துள்ளது. தற்பேது சித்திகை கைது செய்துள்ளோம். அவனை விசாரித்ததில் மேலும் 6 பேர் இதில் தொடர்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்