ஜனாதிபதி மாளிகையில் கவர்னர்கள் மாநாடு
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் கவர்னர்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது. இதில் 23 மாநில கவர்னர்களும் மற்றும் 2 துணை நிலை கவர்னர்களும் கலந்து கொள்கின்றனர்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.