ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்காப்பக்கத்தில்10வனச்சரகங்கள்உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியானசூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களைசேதப்படுத்தி வருவதும்,சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையைகடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி எடுக்கஅருள்வாடிகிராமம் அருகே ஒரு தோட்டத்திற்குள் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானைபயிர்களைசேதப்படுத்தி உள்ளது.அங்குகாவலில் விழுந்த விவசாயி திடீரென சத்தம் கேட்டு உள்ளதால்டார்ச்லைட்டைஅடித்து சத்தம் வந்த பகுதியில் பார்த்து உள்ளார். அப்போது ஒற்றை யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்துபயிர்களைசேதப்படுத்திக்கொண்டுஇருப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அருகே தோட்டத்தில் இருக்கும் விவசாயிகளிடம்தகவலைசொல்லி அவர்களை வரவழைத்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போக்கு காட்டிய அந்த ஒற்றையானையைபட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.