Skip to main content

5 கோடி தடுப்பூசிகளுக்கு டெண்டர் கோரியுள்ள தமிழக அரசு..! 

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Tamil Nadu government seeks tender for 5 crore vaccines


இந்தியாவில் கரோனா வைரஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கை அறிவித்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட எட்டு மாதத் தொடர் ஊரடங்குக்குப் பிறகு பல தளர்வுகளுடன் முழு முடக்கம் விலக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய தடுப்பூசியான கோவாக்ஸின் மற்றும் அமெரிக்க தடுப்பூசியான கோவிஷீல்ட் ஆகியவை சந்தைக்கு வந்தது. 

 

இத்தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததும், முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன் பிற்கு சில காலங்களி 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இத்தடுப்பூசிகள் இரு தவணைகளாக பயனாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 

 

45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி பணியில் முதல் கட்ட டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள காத்திருந்த நிலையிலேயே மத்திய அரசு மே 1ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவரக்ளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. அதிலும், மாநில அரசுகள்தான் 18 முதல் 44 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி இலவசமா அல்லது விலை கொடுத்து செலுத்திக்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவித்தது. 

 

45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான இரண்டாம் டோஸ் முறையாக கிடைக்காமல் அவதிக்குள்ளாகிக்கொண்டிருந்தபோதே மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோர்கான தடுப்பூசியை அறிவித்தது பல விமர்சனங்களை எதிர்க்கொண்டது. அதேபோல், 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசிக்கும் தடுப்பாடு ஏற்பட்டது. 

 

ஒரு கட்டம் வரை மத்திய அரசு மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை பிரித்து வழுங்கும் என்று தெரிவித்தது. பிறகு, மாநிலங்களே கரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. ஆனாலும், மத்திய அரசுக்கு ஒரு விலையாகவும் மாநில அரசுகளுக்கு ஒரு விலையாகவும் இருவேறு விலைகளை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் அறிவித்து. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. பிறகு தடுப்பூசி மருந்து நிறுவனம் மாநிலங்களுக்கான விலையில் சற்றுகுறைத்தது. 

 

இருந்தபோதும் சீரான தடுப்பூசி விநியோகம் கிடைக்காமல் இருந்ததுவந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கான  உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. 

 

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியுள்ளது. மூன்று மாதங்களில் ஐந்து கோடி தடுப்பூசிகள் வழங்க தயாரகவுள்ள நிறுவனங்கள் ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கோரியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு 20 கோடி தடுப்பூசிகள் வழங்கிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.