ஐம்பொன் சிலைகள் மீட்பு
காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் அதிரடி சோதனை நடத்தினார்.
இந்த சோதனையில் ரூ.2.35 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுந்தரநாயனார் சிலை 600 ஆண்டுகள் பழமையானது எனவும், இச்சிலை உத்திரமேரூர் அருகே உள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.