நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு போராட்டம்: முடிவுக்கு வந்தது வழக்கு

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் வகையில் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடக்கவில்லை' என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக, உச்ச நீதிமன்றம் கூறியது.