புதுச்சேரியில் ஒரே நாளில் 400 காவலர்கள் இடமாற்றம்!
புதுச்சேரியில் ஒரேநாளில் திடீரென 400 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிகாலை புதுச்சேரியில் உள்ள 400 காவலர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்து அம்மாநில டி.ஜி.பி. கவுதம் உத்தரவிட்டுள்ளார்.
- சுந்தரபாண்டியன்