Skip to main content

பாமக தலைவராக 25 ஆண்டுகள்... ஜி.கே. மணிக்கு 24ம் தேதி பாராட்டு விழா!

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

்ுிர

 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை மறுநாள் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பாராட்டு விழா தொடங்குகிறது.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்