Skip to main content

பிரதமருக்கு எதிர்ப்பு: விமான நிலையத்தில் ஆபத்தான முறையில் போராட்டம்!

Published on 12/04/2018 | Edited on 12/04/2018
pro s


ராணுவ கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உயரமான விளம்பரப் பதாகைகள் மேல் ஏறி ஆபாத்தான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கறுப்புக் கொடி ஏற்றி, மோடி வருகைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

மோடி வருகைக்காக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கைது செய்யும் முன் ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்