இலங்கைக்கு கடத்த முயன்ற 22 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

அதற்குள் அமெரிக்க டாலர், குவைத் தினார், ஓமன் ரியால்ஸ், சவுதி ரியால்ஸ், யூரோ கரன்சி உள்ளிட்ட வெளிநாட்டு பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு 22 லட்சம். விசாரணையில், இவர்கள் அனைவரும் வியாபாரிகள். விமான நிலையத்துக்கு வந்த ஒருவர், இந்த வெளிநாட்டு பணத்தை கொடுத்து இலங்கையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைத்தால் அதற்கு ஈடாக 10 சதவீதம் கமிஷன் தருவார் என்றும், அதற்கு ஆசைப்பட்டு வாங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.