Skip to main content

மழைநீரில் மிதக்கும் கடலூர்...  தி.மு.க தலைவர் ஸ்டாலின் விசிட்!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

 

'புரெவி' புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் குளம் போல காட்சியளிக்கிறது. கனமழை காரணமாக கடலூர்-சிதம்பரம் பிரதான சாலையில், காரைக்காடு பகுதியில் வெள்ளநீர் ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

 

அதேபோல், சென்னை-கும்பகோணம் சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் வெள்ளநீர் உள்ளே புகுந்து செல்வதால் அந்தச் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் குள்ளஞ்சாவடி- ஆலப்பாக்கம் சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டக்குடி அருகே உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து வடிகால் ஓடை ஒன்று செல்கிறது. இந்த ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நாவலூர்-சாத்தனத்தம் கிராமத்திற்கு இடையில், ஓடையின் தரைப் பாலத்தின் மேல் தண்ணீர் நிறைந்து செல்கிறது. இதனால், ஓடையின் இரு பக்கங்களிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், மன்னம்பாடி-விளாங்காட்டூர் இடையே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் 4,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், திருநாரையூர், கொளக்குடி, சிறகிழந்த நல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பரவாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், என்.எல்.சி சுரங்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குறிஞ்சிப்பாடி அருகிலுள்ள கல்குளம், ஓணான்குப்பம், கொளக்குடி ஆகிய ஊர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. 

 

இப்பகுதியிலுள்ள மக்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் கிழக்குப்பகுதி வெள்ளக்காடாக நிரம்பி வழிகின்றன. இதனால், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிடையே போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக சிதம்பரத்தில் 30 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு வெள்ளாற்றின் குறுக்கே தொழுதூர் அருகே கட்டப்பட்டுள்ள அணை மூலம், வெலிங்டன் ஏரிக்குத் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

 

இன்று மாலை வரை பதினாறு அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. அதன் முழுக் கொள்ளளவு 28 அடி. மேலும், ஏரிக்கு வரும் வெங்கனூர் புடையூர் ஓடைகள் வழியாகவும் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளாற்றில் தற்போதைய 'புரெவி' புயல் காரணமாகச் சிறிதளவு தண்ணீர் ஓடும் காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்து வருவதோடு, செல்ஃபோன் மூலம் செல்ஃபி எடுத்தும் சந்தோஷம் அடைந்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்குடி, சிதம்பரம், கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
 

cnc


பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பாதிப்புக்குட்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதோடு, பொதுமக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் எம்.பி ரமேஷ் உட்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடன் இருந்தனர். மழை வெள்ளத்தின் போது ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் விழிப்புடன் இருந்து பாதுகாப்புப் பணிகளைச் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.