Skip to main content

காவிரி விவகாரம் - தமிழக மக்களுக்கு மே 14-ல் நல்ல செய்தி கிடைக்கும் - எச்.ராஜா

Published on 10/05/2018 | Edited on 10/05/2018


காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக மக்களுக்கு மே 14ம் தேதி நல்ல செய்தி கிடைக்கும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மே.14ம் தேதி தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே 14ஆம் தேதி மிக சந்தோஷமான, மகிழ்ச்சியான 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் துரோகத்திற்கு தீர்வாக தமிழக விவசாயிகளுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நியாயம் வழங்கப்படும்.

தமிழ்நாடு ஏதோ கொந்தளிப்பில் உள்ளது, போராட்டம் நடப்பது என்பது பொய். இன்றும் நெடுவாசலில் உள்ள மக்கள் யாரும் போராட்டத்தில் இல்லை. வடகாட்டில் 30 பேர் இருக்கின்றனர் 6 கிலோ மீட்டர் தள்ளி. இவர்களுக்கு எல்லாம் யார் தொடர்ந்து பணம் கொடுக்கிறார்கள், சாப்பாடு கொடுக்கிறார்கள் என்பது அனைத்தையும் விசாரணை செய்ய வேண்டும். தமிழ்நாடு ஏதோ போராட்டத்தில் இருப்பது என்பது ஒரு மாயை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்