Skip to main content

18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கியது!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

Booking for the corona vaccine for people over 18 has begun!

 

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 15,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 4,640 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,08,855 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 9,90,919  ஆக அதிகரித்துள்ளது. 

 

18 வயது மேற்பபட்டோருக்கு வரும் மே 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 வயது மேற்பபட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு தொடங்கியது. cowin.gov.in என்ற தளத்திலோ, ஆரோக்கிய சேது செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருவதால் ஒடிபி எண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேதி போன்ற விவரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்