கலப்பட நெய் தீபத்துக்கு தடை

இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில், ‘‘தமிழக கோயில்களில் நெய் விளக்குகளில் வனஸ்பதி, கலப்பட எண்ணெய், விலங்கு கொழுப்பு கலந்த எண்ணெய், வேதியியல் பொருட்கள் கலந்த நெய் தீபம் என்ற பெயரில் விற்கப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனத்திடம் தரச்சான்று பெற வேண்டும். நெய் தீப விற்பனை உரிமம் பெற்றவரின் விற்பனையில் கலப்பட நெய் இருப்பது உறுதியானால் ஏல உரிமத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். உரிமம் ரத்தாகும் கோயில்களில் ஆவின் மூலம் தட்டுப்பாடின்றி நெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ. 7க்கு தள்ளி வைத்தனர்.