வரலாறு காணாத வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்திய மக்கள் விரோத மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 10.09.2018 திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் நடத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.