Skip to main content

''விரைவில் உண்மையான பொதுக்குழு... ராஜபக்சேவை போல துரத்தியடிப்பார்கள்''-கோவை செல்வராஜ் பேட்டி!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

"Soon, the real general assembly will be chased like Rajapaksa" - Coimbatore Selvaraj interview!

 

கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதால் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப் உள்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.விலிருந்து ரவீந்திரநாத் எம்.பி.யை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. கட்சி சட்ட விதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர் சத்தியா, விருகை ரவி, அசோக் கந்தன், இளங்கோவன் ஆகிய 22 பேர் நீக்கப்பட்டுள்ளனர்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

 

"Soon, the real general assembly will be chased like Rajapaksa" - Coimbatore Selvaraj interview!

 

இந்நிலையில் ஓபிஎஸ்-சின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், '' எடப்பாடி பழனிசாமி குண்டர்களை வைத்து பொதுக்குழு என்ற ஒன்றை நடத்திய காரணத்தால் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நீக்கினார். தொடர்ந்து தவறான வழியில் அதிமுகவின் பொறுப்பாளர்களாக இருப்பதைப் போல் காட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவை குழம்பும் வகையில் செயல்பட்ட 22 பேரை முதல்கட்டமாக கட்சியின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர். இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொடநாடு வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தினசரி விசாரணைகள் நடந்தாலும் இதில் உண்மையான குற்றவாளி யார் என தெரிந்த பிறகு ராஜபக்சேவை இலங்கையிலே துரத்தியது போல் அதிமுக தொண்டர்கள் அடித்து முடுக்குவார்கள். அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். மூத்த உறுப்பினர் பொன்னையன் கூறியதைப்போல் ஜாதி கட்சியாக, மதக்கட்சியாக மாற்றிக்கொண்டு இன்று எடப்பாடியின் பின்னால் 9 எம்.எல்.ஏ என்கிறார். மற்ற எம்.எல்.ஏக்கள் எல்லாம் வியாபார ரீதியில் புரோக்கரை போல செயல்படுகிறார்கள். இந்த கேவலமான நிலையை ஓபிஎஸ் அடக்க வேண்டிய விதத்தில் செயல்பட்டு கட்சியை காப்பாற்றுவார். விரைவில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களோடு ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும்''என்றார்.

 

அப்பொழுது அருகிலிருந்த புகழேந்தி கையில் வைத்திருந்த செல்போனில் ராஜபக்சே போல் சித்தரிக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை காட்டி ''கோவை செல்வராஜ் சொன்னமாதிரி போட்டோ வந்திருக்கு பாருங்க'' என காட்டினார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் சர்வாதிகாரி, 23 ஆம் புலிகேசி என சொல்லி சிரித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.