Skip to main content

“பாஜக ஒரு பிராடு கட்சி...” -  ஜி. ராமகிருஷ்ணன் அதிரடி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
CPM G Ramakrishnan comment on bjp

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு கூட்டம் வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், “இந்தியா கூட்டணியில் பல்வேறு கட்சிகளுக்கு மத்தியில் பல மாநிலங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருமான வரி, மக்கள் குறை சட்டம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டம் என 5 சட்டத்தை திருத்தி தேர்தல் பத்திரத்தை உருவாக்கியது பாஜக. நிதி கொடுப்பது மூடு மந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த 5 சட்டத்தை திருத்தினார்கள்.

தேர்தல் பத்திர சட்டம் வாபஸ் தீர்ப்பு வந்த பிறகு தான் டெல்லியில் பாஜகவின் தேசிய கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் பத்திர சட்டம் ரத்து செய்யப்பட்டது சரி என்று ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. ஊழலை ஒழிப்பதாக சவடால் பேசும் பிரதமர் மோடி நாளை(4ம் தேதி) தமிழகம் வருகிறார். நீதிமன்றமே தேர்தல் பத்திர சட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள நிலையில் மோடி இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டு மோசடியின் தீர்ப்பு வந்த பிறகு பாஜக ஒரு பிராடு கட்சி என விமர்சிக்கப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்து ஆண்டாக கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் ஒரு மோசடியான அரசை நடத்தி வருகிறது. பாஜகவை வீழ்த்தக்கூடிய பணியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது.

நதிநீர் பங்கிட்டு சட்டத்தையும் உச்சநீதிமன்ற சட்டத்தையும் கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகள் மீறி செயல்படுகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் அணை கட்டும் அந்தந்த அரசுகளை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தானி மட்டும் CPM பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்ற வட மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கேரளாவில் பாஜக வெற்றி பெற முடியாது. இன்றைய சூழலில் தமிழகத்தில் எங்களுக்கு இரண்டு எண்ணிக்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் போட்டியிடுவோம் என ஓரிரு நாளில் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்பதும், மோடியின் பேச்சும் நகைப்புக்குரிய பேச்சு. வாக்கு இயந்திரம் மூலம் முறைகேடு நடைபெறும் என்பதால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த கூறுகிறோம். வாக்குப்பதிவை பொறுத்தவரைக்கும், முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் அடுத்து கண்ட்ரோல் யூனிட் மூன்றாவதாக தான் ஒப்புகை சீட்டு வர வேண்டும். ஆனால் இப்போது வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகை சீட்டு, கண்ட்ரோல் யூனிட் உள்ளது. ஒப்புகைச் சீட்டும் வாக்கு எண்ணும்போது டேலி ஆனால் தான் தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும்” என ஜி. ராமகிருஷ்ணன் பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.