Skip to main content

யார் அந்த இமயமலை யோகி? - சிபிஐ விசாரணையில் வெளிப்பட்ட உண்மை

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

Chitra Ramkrishna

 

தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது, பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்டது என அவர் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குறிப்பாக, இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச்சந்தை தொடர்பான ரகசிய விஷயங்களை சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாகவும் அவரின் ஆலோசனைப்படி சில முக்கிய முடிவுகளை அவர் எடுத்ததாகவும் தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், யார் அந்த இமயமலை சாமியார் என்றும் கேள்வி எழுந்தது.

 

இந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக இமயமலை சாமியார் என்பது வெறும் கட்டுக்கதை என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்த் சுப்ரமணியத்தின் ஆலோசனையின்படியே அவர் முக்கிய முடிவுகளை எடுத்ததும் தெரியவந்துள்ளது. 

 

சிபிஐ அதிகாரிகளால் ஆனந்த் சுப்ரமணியம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையின்போது ஆனந்த் சுப்ரமணியத்திற்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ வழக்கறிஞர், இத்தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபான ஊழல் வழக்கு; அப்ரூவரான நபரால் துணை முதலமைச்சருக்கு நெருக்கடி

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

 

Liquor corruption case; Crisis for the Deputy Chief Minister due to the approved person!

 

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் அரோரா அப்ரூவராக மாறியதால், டெல்லி மாநில துணை முதலமைச்சருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

 

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகங்கள் எனச் சுமார் 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

 

டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்தனர். அதில், டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் அரோரா, தான் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். 

 

எனவே, நவம்பர் 14 ஆம் தேதி அன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர் என்பதால், அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

 

 

Next Story

மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

Published on 21/08/2022 | Edited on 21/08/2022

 

Look out notice against Manish Sisodia!

 

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். 

 

இந்த அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரைச் செய்துள்ளார். புகாரின் பேரில் கலால் துறையில் 11 அதிகாரிகளையும் ஆளுநர் பணியிடை நீக்கம் செய்தார். 

 

டெல்லி மாநில அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஆளுநர் அனுமதி அளிக்காததையடுத்து, புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டு, டெல்லியில் 468 தனியார் மதுபானக் கடைகள் கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதியுடன் மூடப்பட்டன. இந்த டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

 

சோதனையில் கணினி, செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியது சி.பி.ஐ. 

 

இதனால், மணீஷ் சிசோடியா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

சி.பி.ஐ.யின் அதிரடி நடவடிக்கையால் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.