Skip to main content

குறையாத தொற்று எண்ணிக்கை.... கலக்கத்தில் கேரளா..?

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

jh

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. 

 

இன்று 4,531 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 2,325 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 34,314 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,515 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 31,156 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 9 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்