Skip to main content

ரஷ்யாவில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 16 பேர் பலி

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
ரஷ்யாவில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 16 பேர் பலி

உஸ்பெகிஸ்தானில் இருந்து 50க்கும் மேற்பட்டோரை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகில், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கோளாறு காரணமாக பேருந்து இருப்புபாதை மீது நின்றது. அப்போது மாஸ்கோ நோக்கி வந்த ரயில் பேருந்துடன் மோதி பல மீட்டர் தூரம் அதை இழுத்து சென்றது. இதில் உடல் நசுங்கி 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்