Skip to main content

எப்போது தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் அ.ம.மு.கதான் வெற்றி பெறும்! டிடிவி பகீர் பேச்சு!!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018

ஆண்டிபட்டியை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை நான்கு ரோட்டில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  உண்ணாவிரத போராட்டத்தம் போராட்டம் நடைபெற்றது.

    

 

இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்காக தகுதி நீக்கம் செய்ய பட்ட எம்எல்ஏ தங்கத்துரை சுமார் 2 ஆயிரம் சேர் வரை போட்டு பந்தல் அமைத்து இருந்தார்.அதுபோல்  இந்த உண்ணாவிரத போராட்டத்தை தங்கதமிழ்செல்வன் தொடக்கி வைப்பதாக இருந்தது ஆனால் அவர் திடீரென வரவில்லை என்பதால் தங்கத்துரையே உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்து விட்டார்.

 

TTV

 

இருந்தாலும் உள்கட்சிகுள்ளையே கோஷ்டிபூசல் தலைவிரித்து ஆடிவருவதால் தங்கத்துரைக்கு எதிராக உள்ள கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் உண்ணாவிரத்திற்காக வந்தும் கூட  உண்ணாவிரத பந்தலுங்கு வராமல் அங்கங்கே ஓரம்சாரங்களில் நின்று இருந்தனர். அதனால் உண்ணாவிரத பந்தலில் குறைந்த அளவிலே கட்சிகாரர்கள் உட்கார்ந்து இருந்ததால்  பெரும்பாலான சேர்கள் காலியாக தான் இருந்தது.

 

 அது போல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  தங்கத்துரையோடு மேலும் முன்று பேர் தான் இந்த  உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனரே தவிர பெரும்பாலன தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்எல்ஏக்கள் வரவில்லை. இந்த நிலையில்தான் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க டிடிவியுன் தங்கதமிழ் செல்வனும்  மாலை ஐந்து மணிக்கு மேல் வந்தபோது உள்கட்சி கோஷ்டிபூசலால் அங்கங்கே ஒதுங்கி நின்று கொண்டிருந்த கட்சி பொறுப்பாளர்கள் எல்லாம் வந்து டிடிவியிடம் ஆஜராகி விட்டனர்.

       

ttv

 

இந்தஉண்ணாவிதர போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரனோ....தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது 234 தொகுதிகளிலும் எப்ப தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான்  வெற்றிபெறும். எடப்பாடி பழனிச்சாமி  முதல்வர் பதவியை யாரால் தக்க வைக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். சின்னம்மா தயவால் இந்த ஆட்சி நீடித்து வருகிறது.  அப்படி இருக்கும் போது என்னை பார்த்து துரோகி என்கிறார். தமிழக மக்களுக்கு யார் துரோகி என்று விரைவில் தெரியும். 

 

 

1996 தேர்தலை தவிர அனைத்து தேர்தலிலும் நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வரை மாற்றும் வரை நான் ஓய மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். வருகின்ற இடைத்தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்கும். ஆர்கே நகர் தொகுதி போல் 18 தொகுதி உட்பட 20 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். 

 

எத்தனை கோடி செலவு செய்தாலும் அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது. ஆர்கே நகர் தொகுதி போல் அதிமுகவினரை ஓட ஓட விரட்டுவோம். தொகுதி மக்களை புறக்கணித்த இந்த நிலக்கோட்டை தொகுதியில் வரும் தேர்தலில் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கூறி உண்ணாவிரத்தை முடித்து வைத்து வைத்து விட்டு புறப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.