முகக்கவசம் அணியுங்கள்!
— M.K.Stalin (@mkstalin) May 19, 2021
கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!
நம்மையும் காத்து,
நாட்டு மக்களையும் காப்போம்! pic.twitter.com/bPcBrg1Q8E
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. ஊடரங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் நேற்றுமுதல் (18.05.2021) வழக்குப் பதிவும் செய்துவருகிறார்கள்.
இந்நிலையில், முகக் கவசத்தை பொதுமக்கள் முறையாக அணிவதில்லை என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். தற்போது முகக்கவசம் அணிவது தொடர்பாக தமிழக முதல்வர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முகக்கவசம் எப்படி முறையாக அணிய வேண்டும் என்பது பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.