Skip to main content

கொலை மிரட்டல்: வழக்கறிஞர் மீது வழக்கு

Published on 13/09/2017 | Edited on 13/09/2017

கொலை மிரட்டல்: வழக்கறிஞர் மீது வழக்கு

சமாதானம் பேசிய அ.தி.மு.க. பெண் பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

சேலம் மாநகராட்சி எல்லையிலுள்ள நெத்திமேடு பகுதி இட்டேரி சாலையைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது-31). இவரது மனைவி பெயர் ஜூலி (வயது-27). இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேருபாடு காரணமாக, ஜூலி தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் விஷம் குடித்துள்ளார்.

இதையரிந்த அவரது உறவினர்கள் ஜூலியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் காப்பற்றப்பட்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தம்பதியர் இருவரும் தனித்தனியே வாழ்ந்து கொள்வதாக காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்து விட்டுப் பிரிந்து  சென்றுள்ளனர்.

பிரிந்து சென்ற தம்பதியினரை சமாதானப்படுத்தும் முயற்சியில், சேலம், 50-வது வார்டு, அ.தி.மு.க., பெண் பிரதிநிதியான வெங்கடலட்சுமி (வயது-42), என்பவர் ஈடுபட்டார்.

அவர், ஜூலியின் கணவர் கார்த்திக்கு போன் செய்துள்ளார். அப்போது கார்த்தி, அன்னதானப்பட்டியை சேர்ந்த வக்கீல் முருகேசன் (வயது-42), என்பவரிடம் தனது செல்பேசியை கொடுத்துள்ளார்.

அப்போது, வெங்கடலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டிய வழக்குரைஞர் முருகேசன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வெங்கடலட்சுமி அளித்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து, கார்த்தியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வக்கீல் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவசுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்