மகளிர் தின கொண்டாட்டம் எந்த வருடமும் இல்லாதது போல் இந்த வருடம் பெண்கள் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

Advertisment

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அனைவரும் மகளிர் தின கொண்டாட்டத்தை அலுவலகத்தில் நடத்தினார்கள். இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பின்பு பெரிய கேக் ஒன்றை கொண்டு வந்து அதை வெட்டிய ஊழியர்கள் கேக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி இருவருக்கும் கொடுத்தனர்.

INTERNATIONAL WOMENS DAY CELEBRATION ERODE DISTRICT

மேலும் ஊழியர்களும் பகிர்ந்து சாப்பிட்டனர். இந்த மகளிர் தினம் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளதாக பணியாளர்கள் கூறினார்கள்.