Skip to main content

ஆற்றில் மூழ்கி இளைஞர் மரணம்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

 strom incident in villupuram

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது கண்டியங்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் குமார். 40 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தற்போது மழை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் வீட்டிலிருந்து வயல்வெளி பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வயல்வெளிக்கு அருகே ஓடும் பம்பையாறு தண்ணீர் நிரம்பச் சென்றுள்ளது. ஆற்றின் பக்கம் மாடுகள் சென்றுள்ளது. குமார், மாடுகள் ஆற்றில் அடித்துச் சென்று விடுமோ என்று பதறிப் போய் வேகமாகச் சென்று மாட்டைப் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குமார் பம்பை ஆற்றில் தடுமாறி விழுந்துள்ளார்.

 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் குமார் ஆற்றில் விழுந்ததைப் பார்த்து சத்தம் போட்டுக் கத்தியுள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் திரண்டு சென்று, பம்பை ஆற்றில் குதித்து குமாரை தேடியுள்ளனர். நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, ஆற்றில் மூழ்கிய குமாரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும் தண்ணீரில் மூழ்கியதால் குமார் பரிதாபமாக இறந்து போயுள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கண்டமங்கலம் போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக குமாரின் மனைவி வி.ஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகரிலுள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் நகரை ஒட்டி ஓடும் கோமுகியாற்றில் அடித்துச் செல்லப்பட்டார். 6 நாட்களாக அவரை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை சிறுவன் என்ன ஆனார் என்பது தெரியவரவில்லை. 

 

இன்று, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஜியாவுல் ஹக் பறக்கும் கேமரா மூலம் ஆற்றங்கரைப் பகுதியில் தேடும் பணியை ஏற்பாடு செய்துள்ளார். மழையின் காரணமாக இப்படிப் பல்வேறு விதங்களில் மரணங்கள் தொடர்கின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.