Skip to main content

பொள்ளாச்சி வழக்கில் சாட்சியளிக்க முன் வந்த மக்கள், இதுவரை...

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அணைத்து தரப்பு மக்களையும் உலுக்கிய சம்பவம் ஒன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.அந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 12ம் தேதி பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், பாதிக்கப்பட்ட இளம் பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்த பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மிரட்டி வருவதாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் அண்ணா பெல்டால அடிக்காதிங்க அண்ணா என்ற குரல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்பு இது சம்மந்தமாக அந்த இளைஞர்களிடம் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரித்த போது நூற்றுக்கும் மேற்பட்ட  இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

 

pollachi issues



மேலும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன் ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் இந்த வழக்கை போலீசார் மூடி மறைக்க பல வகையில் சூழ்ச்சிகள் நடந்தன. ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிகள் தொடர் போராட்டத்தால் இந்த வழக்கு கடந்த மார்ச் 12ம் தேதி  இது தொடர்பாக இந்த வழக்கின் விசாரணை  சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது .சிபிசிஐடி போலீசார் 40 சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தயாரித்த அறிக்கையை சிபிஐயிடம் நேற்று ஒப்படைத்தனர். பின்னர் சிபிசிஐடி தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையின் விசாரணையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றவாளிகள் மற்றும் 40 சாட்சிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த விசாரணையில் 40 பேரும் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வழக்கின் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் மற்றும் வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு  மாற்ற உத்தரவிட்டது.வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு எதிராக 40 பேர் அளித்த சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் வழக்கில் அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் நேற்று சிபிசிஐடி ஒப்படைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக முன்பை விட இப்பொழுது சாட்சியளிக்க மக்கள் தைரியமாக வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.