Skip to main content

நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்!

Published on 28/02/2018 | Edited on 28/02/2018
Judge Rathna


ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் (89) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

1929ஆம் ஆண்டு பிப்.,13 அன்று, திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூர் கிராமத்தில் பிறந்த அவர், 1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கிய ரத்தினவேல் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) பதவியும் வகித்துள்ளார். அவரது மகன் சுப்பையா தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.

சார்ந்த செய்திகள்