Skip to main content

கள்ளக்காதலியுடன் ஏட்டையா.! சிறைப்பிடித்த ஊர்மக்கள்.!!!  

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
natarajan

     

 காவல் நிலையம் அருகிலுள்ள தன்னுடைய வீட்டிற்கே, கள்ளக்காதலியை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் அதே போலீஸ் ஸடேஷனில் பணியாற்றும் ஏட்டையா. அரசல் புரசலாக இந்த விவகாரம் வெளியில் பரவ, ஊர்மக்களால் சிறைப் பிடிக்கப்பட்டு அதே காவல் நிலையத்தினில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இருவரும். 
 

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டையாகப் பணியாற்றுபவர் நடராஜன். இவருக்கும் அருகிலுள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்த பாரதிக்கும் நெடுநாளாக தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. தற்பொழுது பள்ளி விடுமுறையின் பொருட்டு குழந்தைகளுடன் பெத்த நாடார் பட்டியிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டினில் தங்கி வந்திருக்கின்றார். நேற்று இரவு வேளையில் வழக்கம் போல் சம்பந்தப்பட்ட ஏட்டையா நடராஜனிடமிருந்து அழைப்பு வர, காவல் நிலையம் அருகிலுள்ள ஏட்டையாவின் வீட்டிற்கே சென்றிருக்கின்றார் பாரதி. தினசரி இது போல் உள்ளூர் ஏட்டையா நடராஜனின் வீட்டிற்கு, சம்பந்தமில்லாத பல பெண்கள் வந்து போகும் விவகாரம் உள்ளூர் முழுக்கத் தெரிந்திருக்க, பாரதி ஏட்டையா வீட்டிற்குள் நுழைந்த 10 நிமிடத்தில் வீட்டிற்குள் நுழைந்து, அரைகுறை ஆடையுடன் இருந்த ஏட்டையா நடராஜன் மற்றும் பாரதியை சிறைப் பிடித்தனர் உள்ளூர் மக்கள். நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்துக் கொண்டு, சிறைப் பிடித்த இருவரையும் பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் ஊர்மக்கள். காவல்துறையும் துறை ரீதியான விசாரணையை மேற்கொண்டு வருவதால், நெல்லைப் போலீசாரிடையே பரப்பரப்பினை உருவாக்கியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்