Skip to main content

தமிழகத்தில் தவறான கலாசாரத்தை எச்.ராஜா உருவாக்குகிறார்: டிடிவி தினகரன்

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
ttv


ஒருமையில் பேசி தமிழகத்தில் தவறான கலாசாரத்தை ஹெச்.ராஜா உருவாக்குகிறார் என்று டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் உள்ள ஓர் கல்வி நிறுவனத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள கூடியதே அல்ல. ஒருமையில் பேசி தமிழகத்தில் தவறான கலாசாரத்தை எச்.ராஜா உருவாக்குகிறார். இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற நோக்கில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழகத்தில் தான் வெடிகுண்டு கலாசாரம் இல்லை. ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக. சிறுபான்மையினரை சீண்டும் வகையில் பாஜக நடந்துகொள்கிறது. தமிழகத்தில் வேற்றுமையை உருவாக்கி இந்துக்களின் வாக்குகளை திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

அரசியலுக்காக ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக சிலை வைத்துள்ளனர். மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்