Skip to main content

தண்ணீர் ஊற்றி, சோப்பு போட்டு சுத்தம் செய்யப்பட்ட பேருந்து நிலையம். – பாராட்டிய பொதுமக்கள்...

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

திருவண்ணாமலை நகரத்தில் இருந்து தினமும் 300க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு என தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பாண்டிச்சேரிக்கும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களுரூ, சிவமோகா போன்ற நகரங்களுக்கும், ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர், திருப்பதி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

thiruvannamalai bus stand cleaning

 

 

திருவண்ணாமலையை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரம் திருவண்ணாமலை நகரம் என்பதால் கலசப்பாக்கம், போளுர், கீழ்பென்னாத்தூர், ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பணி காரணமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.

அதேபோல், தென்னிந்தியா அளவில் புகழ்பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் வரவும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். அப்படி வருபவர்கள் அனைவரும் பயன்படுத்துவது திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அறிஞர் அண்ணா பெயரிலான மத்திய பேருந்து நிலையத்தை தான். நகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தாலும் பயணிகள் அமரும்மிடம் எச்சில் துப்பிய கறைகளுடனும், ஓட்டடை அடிக்காத, தூய்மைப்படுத்தாத பேருந்து நிலையமாக இருக்கும். இது பொதுமக்களை முகம் சுளிக்கவே செய்து வந்தது.

இந்நிலையில் திடீரென அக்டோபர் 13ந்தேதி காலை திருவண்ணாமலை நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தனர், பின்னர் கட்டிடங்களில் உள்ள ஓட்டடைகளை சுத்தம் செய்ததோடு, பயணிகள் அமரும், காத்திருக்கும் பகுதிகளை சோப்பு பவுடர், பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவி சுத்தம் செய்தனர்.

இதுப்பற்றி துப்புரவு பணி செய்தவர்கள் தரப்பில் விசாரித்தபோது, தினமும் இரவில் பேருந்து நிலையத்தில் சேரும் குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்கிறோம். ஆனால் விடியற்காலையிலேயே குப்பை சேர்ந்துவிடுகிறது. அந்தளவுக்கு பயணிகள் இந்த பேருந்து நிலையத்துக்கு வருகிறார்கள். இன்று செப்டம்பர் 13ந்தேதி பௌர்ணமி. அதனால் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலையம் காலியாக இருந்தது. இந்த நேரத்தில் சுத்தம் செய்யலாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தார்கள். சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் ராஜா மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் காலையிலேயே வந்து குப்பைகளை வாரி சுத்தம் செய்துவிட்டு, தண்ணீர் ஊற்றி கழுவினோம் என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.